நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 9,276 நபர்கள் வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, பதுளை, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் குருணாகல் போன்ற மாவட்டங்களே சீரற்ற கால நிலையால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் அனர்த்தம் காரணமாக 3 வீடுகள் முற்றாகவும் 82 வீடுகள் பகுதிளவிலும் சேதமடைந்துள்ளன.

71 குடும்பங்களைச் சேர்ந்த 242 நபர்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டும் உள்ளனர்.

Share.
Exit mobile version