பதுளை – தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள், இருவர் குளவி கொட்டுக்கு இலக்கான சம்பவம் பதிவாகியுள்ளது.

அண்மையில் திருமணமான லீன் மற்றும் டான் ஆகியோரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இது தொடர்பான காணொளியையும் அவர்கள், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில், லீன் என்பவரைத் தாக்கிய குளவிகளை அவரின் உடலில் இருந்து அகற்றுவதற்கு காவல்துறை அதிகாரி ஒருவரும், மற்றுமொருவரும் உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவர்கள் சுமார் 15 குளவிகளை லீனின் உடலில் இருந்து அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version