நாட்டில் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு,

எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

இதன்படி, களனியின் மாகொல தெற்கு, நல்லா, பெத்தியகொட மற்றும் மீரிகம ஆகிய நான்கு சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு,

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version