உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலையில் மாற்றம் இல்லை என லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிறுவனம், ​​​​அதிக எரிசக்தி தேவை, விநியோக சங்கிலி சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணமாக, உலக சந்தையில் எல்பி எரிவாயு விலை அதிகரித்து வருகிறது.

உலகளாவிய விலை அதிகரித்துள்ள போதிலும், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் கணிசமான விலையில் லாஃப்ஸ் எரிவாயுவை வழங்கும்.

நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு உலக சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, சந்தை நிலவரங்கள் அனுமதிக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அதற்கேற்ப விலைகளை மாற்றி அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது.

Share.
Exit mobile version