நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பஹா வத்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.

விபத்தும் இடம்பெற்றபோது 70 பயணிகள் பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Exit mobile version