எரிபொருள் விநியோகத்துக்காகப் பேணப்படும் QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தற்போது சீரடைந்துள்ளது.

பொருளாதார ஸ்திர நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இந்தநிலையில் விரைவில் QR குறியீட்டு முறைமை இன்றி, சுதந்திரமாக மக்கள் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version