புனேவில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாலை முதல் நடந்து வந்த இந்த இசை நிகழ்ச்சி இரவு 10 மணியை நெருங்கியதும் பொலிஸ் அதிகாரி உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார்.

இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தினிடையே சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Exit mobile version