புத்தளம் பாலாவியில் இருந்து அருவக்கல் சுண்ணாம்பு குவாரிக்கு சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பற்றி எரிந்ததையடுத்து, புத்தளம் குருநாகல் வீதியில் ரயில் நிறுத்தப்பட்டதால் அந்த வீதியின் போக்குவரத்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் முற்றாக நிறுத்தப்பட்டதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளத்திலிருந்து பாலாவிக்கு சீமெந்து உற்பத்திக்காக சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற ரயிலின் இயந்திரமே தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் நகரின் ஊடாக சென்று கொண்டிருந்த ரயில் திடீரென தீப்பிடித்ததாகவும், ரயில் சாரதி உடனடியாக இயந்திரத்தை நிறுத்தியதால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளம் குருநாகல் பாதையை தடை செய்யும் வகையில் புத்தளம் வைத்தியசாலைக்கு அருகில் ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டதால் பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version