யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

6 பேர் காரில் பயணித்த நிலையில் 2 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Exit mobile version