5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளதாக கலாநிதி சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version