கோழிப்பண்ணை மற்றும் முட்டை கைத்தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் தொழில்துறையை ஒழுங்கான முறையில் பராமரித்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version