அம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை 4.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை கடற்கரையில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று திங்கட்கிழமை (24) அதிகாலை 12.45 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லையெனவும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version