இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 400,000 ஐ எட்டியுள்ளது இது நாட்டின் சுற்றுலாத் துறையானது மீட்சியின் பாதையில் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தற்காலிகத் தரவுகளின் படி ஏப்ரல் 01-20 வரையான காலப்பகுதியில் மொத்தம் 69,799 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளனர்.

முதல் மூன்று மாதங்களில் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஜனவரி முதல் ஏப்ரல் 20 வரை இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 405,478 ஆக இருந்தது.

இந்த மாதத்தில் வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள்.

அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 11,670 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், ரஷ்யாவிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,593 ஆகும்.

Share.
Exit mobile version