கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற விசேட ரயிலில் நேற்று 15 வயதுடைய சிறுவன் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறுகின்றனர்.

புகையிரதம் செல்லும் போது செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற இவர், ஒஹியா மற்றும் இடல்கஸ்ஹின்ன ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுவன் அதே ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்று 1990 சுவசார்யா அம்பியூலன்ஸ் வண்டியில் தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share.
Exit mobile version