இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் இந்த நாட்டில் கடனட்டைகளின் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த வருடம், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 52,991 இலட்சம் எனவும், இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் இலங்கையில் செயற்படும் கடன் அட்டைகளின் எண்ணிக்கை 42,272 இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெப்ரவரி மாதத்திற்குள் அது மேலும் 40,872 இலட்சமாக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த அட்டைகளுக்காக செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் 42,061 மில்லியன் ரூபாவாகவும், பெப்ரவரி மாத இறுதியில் 41,001 மில்லியன் ரூபாவாகவும் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version