மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் “ஹெல்ப் அபேக்ஷா” இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் பினர ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, அபேக்ஷா வைத்தியசாலைக் குழுவின் உப தலைவர் குமாரி வன்னியாராச்சி தனது பிறந்தநாளை முன்னிட்டு வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கினார்.

மேலும், எடேரமுல்லை லயன்ஸ் கழகமும் மருத்துவமனையின் சிறுவர் பிரிவில் பெற்றோர் தங்கும் பகுதிக்கு குளிரூட்டும் அமைப்பை நிறுவுவதற்காக 425,000 தொகையும் இங்கு நன்கொடையாக வழங்கியது.

Share.
Exit mobile version