வெலிமடை-பெலும்கல வனப்பகுதியில் 20 ஏக்கர் அளவில் தீயினால் நாசமாகியுள்ளது.

நிலவும் வறட்சியான காலநிலையுடன் நேற்று (19) பிற்பகல் ஆரம்பித்த தீ வேகமாக பரவியுள்ளது.

விசமிகளால் காட்டுப் பகுதிக்கு தீ ஏற்பட்டதா என்பது தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கெப்பெட்டிபொல பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Exit mobile version