அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வரி கொள்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை ஆரம்பிக்க போவதில்லை என விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் சாருதத்த இளங்கசிங்ஹ இதனைத் தெரிவித்துள்ளார்.

நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தற்காலிக தீர்வை ஏற்க தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அரச வங்கி மூலம் பெற்று கொண்ட கடன் செலுத்தலுக்காக 6 மாத நிவாரண காலத்தை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதில் கிடைக்கப் பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version