ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தீர்ப்​பை அமுல்படுத்தும் அதிகாரம் நீதித்துறைக்கும் பிரதம நீதியரசருக்குமே உள்ளது. அதுதவிர கர்தினாலுக்கு அந்த அதிகாரம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (19) கண்டி தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த வேளையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தாவிட்டால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் முடிவெடுக்கும் எனவும் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அந்த பணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Exit mobile version