இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கான வருகை அட்டையினை ஒன்லைனில் நிரப்பும் முறையினை (Online Arrival Card System) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் வெளிநட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஒன்லைன் செயல் முறையினை பூர்த்தி செய்ய முடியும்.

இந்த புதிய நடவடிக்கையானது பயணிகள் இலங்கைக்குள் நுழைவதற்கான செயல்முறையை இலகுவாகவும் வசதியாகவும் மாற்றும்.

இலங்கையில் ஒன்லைன் வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான பிரித்தானியப் பயணிகளுக்கான தனது ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.

அனைத்து பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.

Share.
Exit mobile version