முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் (TID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் குறித்த அவரது சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காகவே அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version