பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதன்படி ,பல டீல்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் இந்த செயற்பாட்டை எதிர்ப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

ஆகவே அரசாங்கத்திலோ அல்லது அதன் வேலைத்திட்டங்களிலோ தாங்கள் ஒரு தரப்பினராக இருக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் , 21 வது திருத்தம் போன்ற முற்போக்கான நடவடிக்கைகளுக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவினை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version