நாடு முழுவதும் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், இந்த மாதத்தில் இதுவரையில் 2,797 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version