பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்படி முச்சக்கர வண்டிகளுக்கான 5 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 8 லீற்றராகவும், மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 7 லீற்றராகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40லீற்றரிலிருந்து 60 லீற்றராகவும், கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரில் இருந்து 30 லீற்றராகவும், லொரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 லீற்றரிலிருந்து 75 லீற்றராகவும், வேன்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றரிலிருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டது.

அதிகரிக்கப்பட்ட கோட்டா மதிப்புகள் அதே முறையில் பராமரிக்கப்படுமா அல்லது முந்தைய மதிப்புகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Share.
Exit mobile version