இலங்கை நெருக்கடியைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் இந்தியா எப்போதும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உயர்மட்ட சந்திப்பில் கலந்து கொண்டபோது, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடன் மறுசீரமைப்பு பேச்சு வார்த்தைகளில் அனைத்து கடன் வழங்குநர்களையும் கையாள்வதில் வெளிப்படைத்தன்மையும், சமத்துவத்தை உறுதிப்படுத்த கடன் வழங் குநர்களுக்கிடையில் ஒத்துழைப்பும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.

பொருளாதார நெருக்கடியை கையாள இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கு வதாகவும் தெரிவித்தார்.

Share.
Exit mobile version