நாடளாவிய ரீதியில் நேற்று (15) முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

Share.
Exit mobile version