இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது.

இந்நிலையில், அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றம் தொடர்பாக பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென மக்களவையில் ஆளும்தரப்பு கேட்டுக்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.

Share.
Exit mobile version