ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரையில் பேரணியாக குறித்த பகுதிகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த காலப்பகுதியில் பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் நீதிமன்ற தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version