சூரியவெவ முதுநாகல பிரதேசத்திலுள்ள விவசாயத் தோட்டத்தில், 20 ஏக்கரில் மாங்காய் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. அந்த தோட்டத்துக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை சந்​தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (27) மாலை 6 மணியளவில் வானொன்றில் வந்த இந்த நபர்கள், தோட்டத்துக்குள் நுழைந்து மாங்காய்களை பறித்துள்ளனர்.

இதுதொடர்பில் தோட்டத்தின் உரிமையாளருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிரதேசவாசிகளுடன் தோட்டத்துக்குச் சென்று அந்த நால்வரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிவித்த சூரியவெவ பொலிஸார், அந்த நால்வரில் ஒருவர் 14 வயதான மாணவன் என்றும் தெரிவித்தனர்.

Share.
Exit mobile version