நுகர்வோரிடமிருந்து 8400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதில் 6200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version