ஹெட்டிபொல – மடஇன்ன பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது கணவனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

48 வயதான எம்.எம். வசந்த பெர்னாண்டோ என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்டவரின் மனைவி சந்தேகத்தின் பேரில், ஹெட்டிபொல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share.
Exit mobile version