பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.

அதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியின் உண்மை தன்மை மற்றும் நெருக்கடியை தீர்த்து வலுவான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் வெளிப்படுத்துவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Exit mobile version