நாடளாவிய ரீதியில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் 18 சதவீதமானவை சுகாதாரமற்றவை என்றும் மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை அவை வழங்குவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையில் 55 சதவீத உணவகங்கள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் 27 சதவீதம் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version