உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி இல்லை என கூறுவதற்கு முன்னர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.

திவாலான நாட்டில் மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து ஜனநாயகத்தையும் திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

Share.
Exit mobile version