மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய போது, ​​அஜித் நிவார்ட் கப்ரால் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி இந்த தனிப்பட்ட மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version