சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட முதலாம் வகுப்பு மாணவர்களுக்கும், இன்னுமொரு குழுவுக்கும் இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில், 9 மாணவர்கள் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்தே முதலாம் வருட மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version