மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது தொடர்பான அறிக்கைகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 18 ஆம் தேதி இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்தியாவில் வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் வினவிய இந்திய புலனாய்வுப் பிரிவினர்,

அந்தத் தகவல் பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கும் அதே வேளையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழக அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர்கள் இலங்கை எல்லையை கடக்க முடியுமா அல்லது இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் பிரவேசிக்க முடியுமா எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இலங்கை ஆழ்ந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இவ்வாறான தாக்குதலின் அபாயம் குறித்து இந்திய உளவுத்துறை கவனத்தை ஈர்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share.
Exit mobile version