புத்தல – வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

மேலும் பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version