இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) நாக்பூரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும், அவுஸ்ரேலிய அணிக்கு பெட் கம்மின்சும் தலைமை தாங்கவுள்ளனர்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நிர்ணயம் செய்வதால் இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்ரேலிய அணி இந்தியாவில் தொடரை கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகிறது. இம்முறை அவுஸ்ரேலியா அணி தொடரை வென்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துமா என பொறுத்திருந்து பார்ப்போம்…

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version