ஹட்டனில் இருந்து நானுஓயா நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற ரயில் ஒன்று நேற்று (05) மாலை தடம்புரண்டுள்ளது.

குறித்த ரயில் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையிலான பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Exit mobile version