சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காலி முகத்திடல் போராட்டக்காரர்களினால் மருதானையில் இன்று மாலை சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, சுதந்திர தினத்திற்கு தடை ஏற்படும் வகையில் போராட்டங்கள், பேரணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share.
Exit mobile version