விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு நிறைவடைந்தது.

புதிய அமர்வு எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என இது தொடர்பான விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Exit mobile version