இந்த நேரத்தில் பணம் அச்சடிக்கப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை
ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் தற்போது 100 பில்லியன் ரூபா மாத்திரமே இருப்பதே இதற்கான காரணம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version