ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

இந்த விடயங்களை சரிசெய்து மீண்டும் நாட்டை வழமைக்கு கொண்டு வருவேன்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நேற்று முன் தினம் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

எனினும், அவரது நியமனம் பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது, ஏனெனில் அவர் அரசியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவராக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க எனினும், அது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Share.
Exit mobile version