மக்களின் இணக்கப்பாடின்றி அமைக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையானது மக்களின் ஆணையின்றியே நியமிக்கப்படவுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் மக்களை புறக்கணித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவையாகவே கருதப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share.
Exit mobile version