ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை தொடர்பில் குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு- சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவை விட அதிகமான குற்றங்களைச் செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்றாக இருக்கும் என்றும் அகில காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் தேடமாட்டார்கள் எனத் தெரிவித்தார். ஆட்சியில் செயல்படாமல் ஆதரிப்போம்,என்றார்.

Share.
Exit mobile version