நாட்டில் இன்று காலை முதல் தற்காலிகமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கமைய, வெலிசர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி மேற்கொள்ளப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

அத்துடன், பேலியகொடை பகுதியிலும் இன்று காலை முதல் வீதியை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு உரிய முறையில் எரிவாயுவினை பெற்றுத்தரக்கோரி பிரதேச மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாவல நுகேகொட வீதியில் முழுமையாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவலை திறந்த பல்கலைக்கழகத்தை அண்மித்து எரிவாயுவை பெற்றுத்தரக்கோரி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிருலப்பனை சந்தியை மறித்து பொதுமக்கள் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும், தமக்கு உடனடியாக எரிவாயு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என கிருலப்பனை பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Exit mobile version