பேராதனை கலை பீட ஆசிரியர் சங்கம், இன்று (14) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளது.

ஆசிரியர் சங்க உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பாக இல்லை என தெரிவித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் திகதி வரை பரீட்சை தொடர்பான நடவடிக்கைகள் உட்பட அனைத்து பணிகளிலிருந்தும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் தொடர்பில் தேவையான பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிவிட்டதாகவும் பேராதனை கலை பீட விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share.
Exit mobile version