க.பொ.த உயர்தர தரம் 2021 பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பட்டப்படிப்புகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் முதல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுவார்கள் என பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்

பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு தெரிவான மாணவர்களை பதிவு செய்யுமாறு குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

மாணவர்கள் அந்தந்த பட்டப்படிப்புகளுக்கு பதிவு செய்ததன் பின்னர் வெற்றிடமான பாடநெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான முறையீடுகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share.
Exit mobile version