நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இன்று(08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களை பாதித்துள்ள வரவு – செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க கூறியுள்ளார்.

மேலும், சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Exit mobile version